Paristamil Navigation Paristamil advert login

ஹங்கேரி மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்...

ஹங்கேரி  மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்...

14 வைகாசி 2026 வியாழன் 15:47 | பார்வைகள் : 2159


தங்கள் இன மக்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஹங்கேரி குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனின் மேற்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால், அது கணிசமான ஹங்கேரிய இன சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி என்றும், குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஸகார்பத்தியா பிராந்தியத்தைச் சேர்ந்த உக்ரேனிய அதிகாரிகள், பல மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை 11 ரஷ்ய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்தனர். இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதனையடுத்து புடாபெஸ்டில் உள்ள ரஷ்ய தூதரை ஹங்கேரி அழைத்துள்ளது. ஆனால், தூதரகத்திடம் இருந்து இதற்கு உடனடியாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷ்யா மீண்டும் ஒருமுறை உக்ரைனுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் ஐரோப்பா முழுவதற்கும் ஒரு பொதுவான அச்சுறுத்தலாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதல் கட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுவிட்டன. இந்தக் கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவர, நமது ஒருங்கிணைந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. உங்கள் கருணையும், உறுதியான நிலைப்பாடும் பாராட்டுக்குரியவை, நன்றி!" என பதிவிட்டார்.

இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்லோவாக்கியா தனது உக்ரைன் எல்லையை சிறிது நேரத்திற்கு மூடியது.

 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2