எதுவும் கிடைக்காது: உற்சாகத்தில் பழனிசாமி
21 வைகாசி 2026 வியாழன் 07:44 | பார்வைகள் : 1644
சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க., அதிருப்தி அணிக்கு, த.வெ.க., அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கும் செய்திகள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை ரொம்பவே குஷியாக்கி இருக்கின்றன.
அதிருப்தி அணி எம்.எல்.ஏ.,க்களுக்கு போன் செய்து, 'நான் தான் அப்பவே சொன்னேனே... அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. அவர்களை நம்பி போனால், நற்றாற்றில் தான் நிற்க வேண்டும் என்றேன். என் பேச்சை கேட்டிருந்தால், கட்சிக்கு விசுவாசமாக இருந்தீர்கள் என்ற பெயர் கிடைத்திருக்கும். இப்போது கூட ஒன்றும் கெட்டு போகவில்லை; நம்ம பக்கம் வந்து விடுங்கள்' என பழனிசாமி பேசி வருகிறார்.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பது உறுதியானால், பழனிசாமி பக்கம் பலரும் வர வாய்ப்பு இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire