தெற்கு லெபனான் மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு - இஸ்ரேல்
24 வைகாசி 2026 ஞாயிறு 18:51 | பார்வைகள் : 1442
இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி, தெற்கு லெபனான் பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு அப்பால் பாதுகாப்பான திறந்தவெளிப் பகுதிகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (24) வெளியிடப்பட்ட இரண்டாவது கட்டாய வெளியேற்ற உத்தரவு இதுவாகும்.
இதற்கு முன்னர் தெற்கு லெபனானிலுள்ள மேலும் 10 கிராம மக்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வெளியேற்ற உத்தரவுகளுக்கு முன்னும் பின்னும், லெபனானின் சில பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan