உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலில் இருவர் உயிரிழப்பு
25 வைகாசி 2026 திங்கள் 07:06 | பார்வைகள் : 1648
உக்ரைனில் சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் பெலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இன்று (24) வான் வழி தாக்குதல்களை நடத்திய ரஷ்யா, சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஆரேஷ்நிக் பெலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியிருப்பதாகவும் இந்தத் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
24.05.2026 கீவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அரசு அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள், பாடசாலைகள் பலத்த சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களில் 83 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சண்டையில் இத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் மூன்றாவது முறையாகப் பயன்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire