தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
27 வைகாசி 2026 புதன் 07:28 | பார்வைகள் : 904
அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக் கொண்டார். பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே தவெகவில் இசக்கி சுப்பையா இணைந்தார்.
இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவை தொடர்ந்து அந்த தொகுதியை சட்டசபை செயலகம் காலியானதாக அறிவித்து, அரசிதழில் அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது.
அதன் விவரம்;
திருச்சி கிழக்கு
மதுராந்தகம்
தாராபுரம்
பெருந்துறை
அம்பாசமுத்திரம்
இந்த 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan