Paristamil Navigation Paristamil advert login

தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய்

தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய்

9 ஆடி 2026 வியாழன் 11:07 | பார்வைகள் : 912


ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் முழுமையாகச் சென்று சேர வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு சில பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்று சேருவதில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அவர் கூறியதாவது:

ஊரகவளர்ச்சி துறையில் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேரவேண்டும்; ஒரு சில பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்று சேர்வதில்லை என புகார்கள் வருகின்றன

பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்; திட்டங்கள் சென்று சேர்வது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்