கடும் வெப்பம்: Fête de la Musiqueஐ முன்னிட்டு தெருக்களில் மதுபானம் அருந்தத் தடை!!
20 ஆனி 2026 சனி 22:01 | பார்வைகள் : 3961
கடுமையான வெப்ப அலை காரணமாக, ஜூன் 21 அன்று நடைபெறவிருந்த Fête de la Musique இசை விழாவை சில நகராட்சிகள் ரத்து செய்துள்ளன. மேலும், சிவப்பு எச்சரிக்கையில் உள்ள பல பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் மதுபானம் அருந்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Paris உட்பட பல நகரங்களில் இந்தத் தடை அமுல்படுத்தப்பட உள்ளது. ஆனால் பார்கள் மற்றும் உணவகங்களின் வெளிப்புற அமர்வுகள் பொதுவாக இந்தத் தடையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. சில குடிமக்கள் இந்த விதியை ஏற்கவில்லை என்றும், அதை நடைமுறையில் அமுல்படுத்துவது கடினம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் நோக்கம், வெப்ப அலை காலத்தில் மதுபானம் ஏற்படுத்தும் நீரிழப்பைத் தடுக்கவும், இசை விழா இரவில் அவசர மருத்துவ மற்றும் மீட்பு சேவைகளின் பணிச்சுமையை குறைக்கவும் ஆகும். இதனால் பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பு மேம்படும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இருப்பினும், காவல்துறையினரும் வணிகர்களும் இந்த விதியை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் எனக் கூறுகின்றனர். தேவையான இடங்களில் எச்சரிக்கை அல்லது அபராதம் வழங்கப்படலாம் என்றாலும், அதிகாரிகள் நடைமுறையில் ஒரு அளவு சகிப்புத்தன்மையுடன் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire