Paristamil Navigation Paristamil advert login

ஜூன் 10 வேலைநிறுத்தத்திற்குப் பிறகு SNCF ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ்!!

ஜூன் 10 வேலைநிறுத்தத்திற்குப் பிறகு SNCF ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ்!!

23 ஆனி 2026 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 2623


ஜூன் 10 அன்று நடைபெற்ற 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்குப் பதிலாக, SNCF நிறுவனத்தின் அனைத்து  ஊழியர்களும் ஜூலை மாத சம்பளத்துடன் 100 யூரோக்கள்  ஊக்கத்தொகையைப் பெறுவார்கள். தொழிற்சங்கங்களின் தகவலின்படி, இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் பாதி ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டம் SNCF நிறுவனத்தின் துணை நிறுவனமயமாக்கல் (filialisation) திட்டங்களுக்கு எதிராகவும், சம்பள உயர்வை வலியுறுத்தியும் நடத்தப்பட்டது. இதையடுத்து, மனிதவளப் (HR) பிரிவில் கூடுதலாக சுமார் 100 புதிய பணியிடங்களை உருவாக்குவதாக SNCF நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிராந்திய தொடருந்து சேவைகளுக்கான போட்டி டெண்டர்களில் பங்கேற்கும் நோக்கில் இந்த துணை நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் சேவைகள் மேம்படலாம் என சிலர் கருதினாலும், ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் உற்பத்தித் திறன் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3