தாய்லாந்துக்கு இலவச விடுமுறையில் சென்ற 11 இளம் பிரெஞ்சு நாட்டவர்கள் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைது!!
13 ஆவணி 2026 வியாழன் 16:35 | பார்வைகள் : 244
தாய்லாந்தில் ஜூன் மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறைந்தது 11 இளம் பிரெஞ்சு நாட்டவர்கள் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தாய்லாந்திலிருந்து ஹாங்காங் வழியாகச் சென்ற இரு பிரெஞ்சு இளைஞர்களும் கஞ்சா கொண்ட சூட்கேஸ்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றவியல் குழுக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களை இலவச விடுமுறை மற்றும் பணம் வழங்குவதாகக் கூறி கவர்கின்றனர். அவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினி உபகரணங்கள் இருப்பதாகக் கூறி சூட்கேஸ்களை ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லச் செய்கின்றனர். ஆனால் அவற்றில் உண்மையில் 10 முதல் 20 கிலோ வரை கஞ்சா இருக்கக்கூடும்.
இந்த வழக்குகளில் ஈடுபடும் இளைஞர்களில் பலர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, பொருளாதார ரீதியாக சிரமப்படும் இளைஞர்கள் என ஒரு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர்களில் சிலர் தாங்கள் போதைப்பொருளை கடத்துவதாகவே தெரியாமல் இந்தப் பயணங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த “தாய்லாந்து திட்டங்கள்” குறித்து பிரான்சின் தேசிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது. இளைஞர்களை யார் ஆட்சேர்ப்பு செய்கிறார்கள், அவர்களுக்குப் பின்னால் செயல்படும் குற்றவியல் வலையமைப்புகள் யாவை என்பதைக் கண்டறிவதே விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire