ஜனாதிபதி ட்ரம்ப் மீது வழக்கு தொடுத்த ஊடக அமைப்புகள்
13 ஆவணி 2026 வியாழன் 18:02 | பார்வைகள் : 273
ட்ரம்ப் மீது ஊடக அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தனது Truth Social சமூக ஊடக தளத்தில் வெளியிடும் பதிவுகளை, பணம் கொடுத்து முன்னதாகப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதற்காக The Intercept மற்றும் Freedom of the Press Foundation ஆகிய ஊடக அமைப்புகள் கூட்டாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
அவர்களின் குற்றச்சாட்டு, பொதுமக்களுக்கு உரிய தகவல்களை ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்வது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக தவறானது என்பதாகும்.
Truth API எனப்படும் இந்த சேவை, மாதத்திற்கு 60,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை கட்டணம் வசூலித்து, ட்ரம்ப் மற்றும் முக்கிய கணக்குகளின் பதிவுகளை நேரடியாக வழங்குகிறது.
வழக்கில், இது முதல் திருத்தச் சட்டத்தின் (First Amendment) அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், அரசாங்க தகவல்களை பணம் கொடுத்து மட்டுமே பெறும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாவது திருத்தச் சட்டத்தின் (Fifth Amendment) பாதுகாப்புகளையும் மீறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் மீடியா குழுமம், “பல தளங்கள் ஏற்கனவே subscription API-களை வழங்குகின்றன” என விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் விமர்சகர்கள், ட்ரம்ப் தனது பதிவுகள் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதால், இதை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவது அழுக்கான நடைமுறை எனக் கூறுகின்றனர்.
இந்த வழக்கு, நியூயார்க் தெற்கு மாவட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire