சிசிலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு
14 ஆவணி 2026 வெள்ளி 15:35 | பார்வைகள் : 153
சிசிலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் தீவிரமான எரிமலையாக கருதப்படும் மவுண்ட் எட்னா(Mount Etna) தொடர்ச்சியாக வெடித்து வருவதால் அப்பகுதியை சுற்றிய விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6ம் திகதி முதல் இத்தாலியின் சிசிலி(Sicily) தீவில் தொடங்கிய இந்த எரிமலை வெடிப்பு நடவடிக்கையால், எரிமலையை சுற்றிய வான் பரப்பில் எரிமலை சாம்பல்கள் பெருமளவு பரவியுள்ளன.
மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சாம்பல் புகை மூட்டத்தினால் சிசிலி தீவில் உள்ள கட்டானியா பொன்டாரோசா விமான நிலையம்(Catania Fontanarossa Airport) தன்னுடைய விமான சேவைகளை முழுவதுமாக நிறுத்தியுள்ளது.
விமான நிலைய அறிக்கைப்படி, சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை இங்கிருந்து எந்தவொரு விமானங்களும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதன்கிழமை மேலும் 52 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான நிலையத்திற்கான வருகை மற்றும் இங்கிருந்து புறப்படும் விமானங்கள் என கிட்டத்தட்ட 700 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு வழக்கமான நிகழ்வுகளில் ஒன்று தான் என்றாலும், இந்த முறை ஏற்பட்டுள்ள வெடிப்பு வழக்கத்திற்கு மாறானது என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த முறை எரிமலை வெடிப்பான சிசிலியின் மற்றொரு விமான நிலையமான கோமிசோ(Comiso) மற்றும் அண்டை நாடான மால்டா வரை கடுமையான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire