Paristamil Navigation Paristamil advert login

APL சீர்திருத்தம்: பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்!!

APL சீர்திருத்தம்: பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்!!

14 ஆவணி 2026 வெள்ளி 16:16 | பார்வைகள் : 426


பெற்றோரின் வருமானத்தையும் கணக்கில் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் APL வீட்டுவசதி உதவியை குறைக்க அல்லது நீக்க வேண்டும் என்று  அரசு அறிக்கை பரிந்துரைக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 550 மில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும். தற்போது மாணவர்களின் APL கணக்கீட்டில் பெற்றோரின் வருமானம் சேர்க்கப்படுவதில்லை.

2021ஆம் ஆண்டில் சுமார் 7 லட்சம் குடும்பங்களில் குறைந்தது ஒரு மாணவர் APL பெற்றிருந்தனர். ஒரு மாணவருக்கு சராசரியாக 200 யூரோக்கள் வழங்கப்பட்ட நிலையில், மொத்த செலவு 1.65 பில்லியன் யூரோக்கள் ஆகும். பெற்றோரின் வருமானத்தை சேர்த்தால் சுமார் 310 000 குடும்பங்களின் APL குறையும், மேலும் 200 000 குடும்பங்கள் இந்த உதவியை முழுமையாக இழக்கக்கூடும்.

இந்த பரிந்துரைக்கு பல மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாணவர் ஒன்றியம், இந்த நடவடிக்கை பல்லாயிரக்கணக்கான மாணவர்களை வீடற்ற நிலைக்கு தள்ளி, அவர்களின் படிப்பை நிறுத்தும் சூழலை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக பெற்றோருடன் குடும்ப உறவு முறிந்த மாணவர்களுக்கு இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Unef அமைப்பும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, இது இளைஞர்களின் சுயநிலைக்கும் வீட்டுவசதிக்கும் மேலும் ஒரு தடையாக மாறும் என தெரிவித்துள்ளது. எனவே, 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த பரிந்துரையை ஏற்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.