Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் - 20 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் - 20 பேர் உயிரிழப்பு

15 ஆவணி 2026 சனி 12:12 | பார்வைகள் : 146


இந்தோனேசியாவின் மத்திய தீவுக் கூட்டத்துக்கு அருகில் இன்று 15.08.2026 அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின்  காரணமாக 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 7.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் கட்டடங்கள், வீடுகளும் சேதமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவற்றின் இடிபாடுகளுக்குள் சிக்கியதில் இந்த மரணங்கள் சம்பவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.