Paristamil Navigation Paristamil advert login

மலேசியா விமான நிலையத்தில் தீப்பற்றி எரிந்த ஹெலிகொப்டர்

மலேசியா விமான நிலையத்தில்  தீப்பற்றி எரிந்த ஹெலிகொப்டர்

15 ஆவணி 2026 சனி 13:13 | பார்வைகள் : 148


மலேசியாவின் சுபாங் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் உள்ள பராமரிப்புப் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

காமோவ் கா-32 (Kamov Ka-32) ரக ஹெலிகொப்டர் எஞ்சின் பரிசோதனையின்போது தீப்பிடித்து எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று சனிக்கிழமை 15.08.2026 இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ஹெலிகொப்டர் முற்றிலும் தீக்கிரையானது.

அதில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், ஹெலிகொப்டரின் சிதைவுகள் பட்டு வெளியே நின்ற ஒருவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.