Paristamil Navigation Paristamil advert login

அயலவர்கள் சத்தம் போட்டதாக ஆத்திரம்: கத்தியுடன் வீடு புகுந்து 3 பேரைத் தாக்கிய நபர்!!

அயலவர்கள் சத்தம் போட்டதாக ஆத்திரம்: கத்தியுடன் வீடு புகுந்து 3 பேரைத் தாக்கிய நபர்!!

15 ஆவணி 2026 சனி 20:37 | பார்வைகள் : 284


Val-d’Oise மாவட்டத்தின் Louvres பகுதியில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள் அதிக சத்தம் எழுப்பியதாகக் கூறி ஆத்திரமடைந்த 31 வயது நபர், சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்தியுடன் அவர்களது வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை Louvres நகரின் Square de Nîmes பகுதியில் உள்ள வீட்டின் கதவு தட்டப்பட்டுள்ளது. அப்போது சத்தம் தொடர்பாக அதிருப்தியடைந்திருந்த அயலவர் ஒருவர், கையில் சமையல் கத்தியுடன் வீட்டின் வாசலில் நின்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவரில் இருவர் மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபரான 31 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Louvres நகரின் ஜொந்தாமினர் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.