மாவட்டங்கள் எண்ணிக்கை உயரும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
18 ஆவணி 2026 செவ்வாய் 10:44 | பார்வைகள் : 167
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தவும், புதிதாக 20 தாலுகாக்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
**சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:**
தமிழகத்தில் தற்போது 26 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் வழங்கப்படுகின்றன. கடந்த 100 நாட்களில் 39.26 லட்சம் பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், பத்திரப்பதிவுக்கு விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது.
கடந்த ஆட்சிகளில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. மேலும், 35 லட்சம் வேட்டி, சேலைகள் தேக்கமடைந்துள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 8 முறை மட்டுமே ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது போதுமான அளவு மழைப்பொழிவு இல்லை. செப்டம்பர் மாதத்துக்கு பிறகு வறட்சி நிவாரணம் மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்கள் குறித்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர், மாவட்டங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்துவதுடன், புதிதாக 20 தாலுகாக்களையும் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்போது இடநெருக்கடியான பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக 83 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே 50 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை விருந்தினர்கள், குழுக்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான செலவுகளை வருவாய் அலுவலர்களே மேற்கொண்டு வந்தனர். இனி அந்த செலவுகளை மாவட்ட நிர்வாகமே ஏற்கும் வகையில் 6.85 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire