ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை
18 ஆவணி 2026 செவ்வாய் 07:02 | பார்வைகள் : 167
ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட கருத்தில், அமெரிக்கா இனி வெளிநாட்டு போர்களில் ஈடுபடாது என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், ஆனால் ஈரான் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான வரம்பை அவரது அரசு நிர்வாகம் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை வழங்கும் அறிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக இஸ்ரேல் அளிக்கும் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், அது மிகப்பெரிய உலகப் போராக மாறி தாங்க முடியாத பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire