பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி
18 ஆவணி 2026 செவ்வாய் 18:29 | பார்வைகள் : 275
பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் மெல்ல பரவி வருகிறது.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள பள்ளி ஒன்றிற்குள் இன்று காலை இரண்டு துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளார் மாணவர் ஒருவர்.
வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரை அவர் துப்பாக்கியால் சுட, குறி தப்பியதால் ஆசிரியர் உயிர் பிழைத்துள்ளார்.
உடனே மற்றொரு வகுப்புக்குச் சென்ற அந்த மாணவர், அங்கிருந்த ஒரு மாணவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத்தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.
அவர்கள் இருவருமே பலியாகிவிட்டுள்ளார்கள். மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
தாக்குதலை தாக்குதல்தாரி இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக பள்ளியிலிருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி, உயிரிழந்த மாணவர், காயமடைந்தவர்கள் என யாருடைய பெயர் முதலான விவரங்களும் வெளியாகவில்லை.
ஜூன் மாதம், 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள், பிலிப்பைன்ஸ் பள்ளி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், சுமார் 20 மாணவர்கள் காயமடைந்தார்கள்.
அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிசார் உறுதியளித்திருந்த நிலையில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire