Paristamil Navigation Paristamil advert login

தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்: தமிழிசை

தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்: தமிழிசை

22 ஆவணி 2026 சனி 07:56 | பார்வைகள் : 162


பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக அதிகரிக்கும். மேலும், நாடாளுமன்றத்தில் 200 பெண்கள் எம்.பி.க்களாக வருவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு சொல்கிறேன், பெண்களுக்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் 543 இடங்களிலேயே பெண்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று கேட்டால், அவர்கள் வழங்க மாட்டார்கள்.

தொகுதி மறுவரையறை காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் சதவீதம் குறையாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார். அதைத்தான் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் சதவீதம் குறையக்கூடாது என்பதையே அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

நமது சகோதரிகளுக்கு இப்போதுதான் இரு வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் அதிக அளவில் நாடாளுமன்றத்திற்கு வரும்போது, பெண்களுக்கான குரல் வலுவாக ஒலிக்கும்.

அதுமட்டுமின்றி, சட்டப்படி தொகுதி மறுவரையறை நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுக்காது. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் துணைபோக மாட்டோம்.

எனவே, காவிரியும் வேண்டும், தொகுதி மறுவரையறையும் வேண்டும், பெண்களுக்கான இடஒதுக்கீடும் வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3