Paristamil Navigation Paristamil advert login

கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கிய Roissy-Charles-de-Gaulle விமான நிலைய சுங்க அதிகாரிகள்!!

கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கிய Roissy-Charles-de-Gaulle விமான நிலைய சுங்க அதிகாரிகள்!!

22 ஆவணி 2026 சனி 09:14 | பார்வைகள் : 276


Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் ஜப்பானிய போக்கர் சாம்பியன் மீது நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்தில் புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 நவம்பரில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு முன்னதாக, கொள்ளையர்களுக்கு தகவல்கள் வழங்கியதாக Roissy விமான நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் சுங்க அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேலும் இருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முக்கிய சந்தேகநபரான 30 வயதுடைய Moussa, ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாக கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கடந்த 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி அன்று Bobigny-யில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தாம் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட Moussa, “நான் செய்த செயலுக்கு வருந்துகிறேன்” எனக் கூறி பரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் விடுதலை கோரினார். ஜப்பானிய போக்கர் வீரர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாம் பங்கேற்றதாக அவர் மீது சந்தேகம் நிலவுகிறது. இந்த வழக்கில் இரண்டு சுங்க அதிகாரிகள் உட்பட மேலும் நான்கு பேர் நீதித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகள் கொள்ளையர்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து விசாரணையாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் நிலையில், Moussa-வின் விடுதலை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து, அவரை தொடர்ந்து காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விமான நிலையத்துக்குள் பணியாற்றிய அதிகாரிகளின் பங்கு குறித்த விசாரணையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3