Paristamil Navigation Paristamil advert login

ஓட்டு வங்கிக்காக வந்தே மாதரம் இரு பத்திகள்: காங்கிரசுக்கு பாஜ கண்டனம்

ஓட்டு வங்கிக்காக வந்தே மாதரம் இரு பத்திகள்: காங்கிரசுக்கு பாஜ கண்டனம்

23 ஆவணி 2026 ஞாயிறு 11:41 | பார்வைகள் : 201


வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது என்ற காங்கிரசின் முடிவுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறுகிய ஓட்டு வங்கி நலன்களுக்காகவே காங்கிரஸ் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் பாஜ விமர்சித்துள்ளது.

கட்சியின் நிகழ்ச்சிகளில் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரசின் இந்த நிலைப்பாடு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முழுமையான வந்தே மாதரம் பாடலை பாடாமல், இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது நாட்டுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அவமரியாதை என பாஜ விமர்சித்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளின் கூட்டம் பாஜ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, தேசிய பாடலான வந்தே மாதரத்தின் மரபை சமகால அரசியல் ஓட்டு வங்கி கணக்குகளுக்குள் சுருக்கிவிட முடியாது உள்ளிட்ட தீர்மானங்களை பாஜ நிறைவேற்றியது.

இதுகுறித்து பாஜ தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“வந்தே மாதரம் பாடல் தேசிய உணர்வின் அழியாத சின்னமாகவும், சுதந்திரப் போராட்டத்தின் மந்திரமாகவும் திகழ்கிறது. வந்தே மாதரத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை உறுதிப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதவாதம் மற்றும் குறுகிய ஓட்டு வங்கி நலன்களுக்காக தேசிய பாடலை பின்னுக்குத் தள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் பாஜ நிராகரிக்கிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3