Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகளை அனுப்புவதாக மக்ரோன் அறிவிப்பு!!

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகளை அனுப்புவதாக மக்ரோன் அறிவிப்பு!!

22 ஆவணி 2026 சனி 22:08 | பார்வைகள் : 374


பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், உக்ரைன் தனது வான்வெளியைப் பாதுகாக்க உதவும் வகையில் புதிய இடைமறிப்பு ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார். ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறை உள்ளது.

ஒரு வணிக வளாகத்தின் மீது நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மக்ரோன் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். உக்ரைனுக்கு தேவையான உதவிகளை வழங்க, போதுமான வளங்களைக் கொண்ட அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யா-உக்ரைன் போரில் இரு தரப்பினரும் நீண்ட தூர தாக்குதல்களை அதிகரித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சிவில் கட்டமைப்புகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம், உக்ரைனில் குறைந்தது 437 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; தலைநகர் கீவிலும் பலர் உயிரிழந்து காயமடைந்தனர்.

இந்த சூழ்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் “விருப்ப நாடுகளின் கூட்டணி” திங்கட்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, ஜெர்மன் தலைவர் Friedrich Merz மற்றும் பிரிட்டன் பிரதமர் Andy Burnham ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவார்கள்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3