Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் விருந்தில் ஏற்பட்ட தகராறு - 56 வயது நபர் உயிரிழப்பு!

இலங்கையில் விருந்தில் ஏற்பட்ட தகராறு - 56 வயது நபர் உயிரிழப்பு!

23 ஆவணி 2026 ஞாயிறு 10:32 | பார்வைகள் : 170


கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) அதிகாலை இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளது.

இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக்கொலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3