Paristamil Navigation Paristamil advert login

எல்லைப் பேச்சுவார்த்தை: சீனா செல்கிறார் அஜித் தோவல்

எல்லைப் பேச்சுவார்த்தை: சீனா செல்கிறார் அஜித் தோவல்

24 ஆவணி 2026 திங்கள் 12:44 | பார்வைகள் : 167


எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க, இந்தியா-சீனா இடையிலான சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங் செல்ல உள்ளார்.

இந்தியாவும் சீனாவும் 3,488 கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. எல்லையில் நீடித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 2003-ம் ஆண்டு முதல் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் சார்பில் சிறப்பு பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் வாங் யீ சிறப்பு பிரதிநிதியாக உள்ளார்.

இதற்கிடையில், 2020-ம் ஆண்டு லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா-சீனா உறவு மோசமடைந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், சிறப்பு பிரதிநிதிகள், ராணுவ தளபதிகள் மற்றும் இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு ஆகியவற்றின் வாயிலாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், எல்லைப் பிரச்னை தொடர்பாக 25-வது சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை (ஆக. 24) பீஜிங் செல்ல உள்ளார். அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்