அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி
25 ஆவணி 2026 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 230
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி கற்பிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
- தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- ‘வாசிப்பை நேசிப்போம்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழங்கப்படும்.
- ‘ஓடி விளையாடு’ திட்டத்தின் கீழ் தினமும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும்.
மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும். - 2 முதல் 9-ம் வகுப்பு வரை ‘திறன் பிளஸ்’ திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி அறிமுகப்படுத்தப்படும்.
- மாணவர்களின் புத்தகப்பை சுமைக்கு முடிவு கட்டும் வகையில் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் செயல்படுத்தப்படும்.
- மாணவர்களின் திறனை உறுதி செய்ய 10.5 லட்சம் பேருக்கு ‘திறன் பிளஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும்.
- மாணவர்களின் தனித்துவமான கற்றலை வலுப்படுத்த ‘தன்னிலை கற்றல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களில் 358 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
- ஒவ்வொரு நாளும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும்.
- 500 பள்ளிகளில் 68 மாணவர்களுக்கு ஏஐ சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும்.
- 2 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்துள்ளவர்களின் குழந்தைகளுக்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்படும்.
- மாதத்தில் ஒரு நாள் ‘புத்தகப்பை இல்லா நாள்’ கடைப்பிடிக்கப்படும்.
தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்
- முதல்வரின் பெருங்கனவான மீண்டும் உலகத் தமிழர் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
- கணினியில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றும் இருவருக்கு ‘இணைய தமிழ் செம்மல்’ விருது வழங்கப்படும்.
- அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கூடுதலாக ரூ.5.75 கோடி நிதி வழங்கப்படும்.
நகர்ப்புற துறை அறிவிப்புகள்
- பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் ரூ.2.50 கோடி செலவில் அவரது திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும்.
- வேலு நாச்சியார், ஈவெரா, அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் மற்றும் காமராஜருக்கு சென்னையில் கோட்டம் அமைக்கப்படும்.
- சென்னையில் கழிவுநீரில் இருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு தயாரிக்கப்படும்.
- பாதாள சாக்கடை திட்டம் இயந்திரமயமாக்கப்படும்.
- 1 லட்சம் எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்படும்.
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire