Paristamil Navigation Paristamil advert login

விண்ணை நோக்கி பாயும் லேசர் செயற்கைக்கோள்..!!

விண்ணை நோக்கி பாயும் லேசர் செயற்கைக்கோள்..!!

23 புரட்டாசி 2018 ஞாயிறு 10:58 | பார்வைகள் : 15948


NovaSAR எனப்படும் செயற்கைக் கோள் இந்தியன் ராக்கெட்டின் உதவியுடன் அதன் ஒழுக்கில் பயணிக்கத் தயாராகிவிட்து.
 
இந்தச் செயற்கைக் கோள் ஆனது எந்த வானிலையிலும், எந்நேரத்திலும் புவியில் நடைபெறும் செயற்பாடுகளைப் படம்பிடிக்கும் தன்மை கொண்டது.
 
இது பல அவதானிப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு தயார்ப்படுத்தப்படிருந்தாலும் முக்கியமாக சந்தேகத்ததுக்கிடமாக கப்பல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அனுப்பப்படுவதாக தெரியவருகிறது.
 
எண்ணைக் கசிவு, வெள்ள மற்றும் காட்டு கண்காணிப்பு, பேரழிவு அனர்த்தங்கள் மற்றும் தாவர மதிப்பீடுகளை மேற்கொள்வது போன்றன இதன் நோக்கங்களாகக் காணப்படுகின்றன.
 
இவ் விண்கலமானது இந்தியாவின் PSLV ராக்கெட்டின் உதவியுடன் புவிக்கு மேலே 580 கிலோ மீற்றர்கள் தூரமுள்ள ஒழுக்கில் ஏவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.