Paristamil Navigation Paristamil advert login

நள்ளிரவில் நகராட்சி காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு – Val-d’Oise-ல் பரபரப்பு!!

நள்ளிரவில் நகராட்சி காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு – Val-d’Oise-ல் பரபரப்பு!!

26 ஆவணி 2026 புதன் 19:15 | பார்வைகள் : 208


Groslay நகராட்சி காவல்துறைக்கு சொந்தமான அடையாளம் பொறிக்கப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்று திட்டமிட்டு தீவைக்கப்பட்டு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை கவனித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில், அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

தீ வேகமாக பரவியிருந்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்துக்கும், அதனை ஒட்டியிருந்த ஒரு வீட்டுக்கும் தீப்பற்றியிருக்க வாய்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. நகராட்சி காவல்துறை வாகனம் மட்டும் தீயில் முற்றாக அழிந்துள்ளது.

நகராட்சி காவல்துறை வாகனமே குறிவைத்து தீவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிய விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. Groslay நகர மேயர் François Jeffroy, இந்தச் சம்பவத்தை கண்டிப்புடன் எதிர்த்து, “எதையும் விட்டுவைக்க மாட்டோம்” என்ற உறுதியாக தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்