ஏலியன்ஸ் குறித்து தகவல் வெளியிட்ட நாசா
23 ஆனி 2017 வெள்ளி 05:05 | பார்வைகள் : 15234
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏலியன்ஸ் குறித்த தகவலை நாசா கெப்ளர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது.
அதில் 10 புதிய கோள்கள் உயிர் வாழத் தகுதியுடையதாக உள்ளது என தெரிவித்தது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த நான்கு வருடங்களாக நடத்திய ஆராய்ச்சியில் இதுவரை ஏராளமான கோள்கள் கண்டறியப்பட்ட்டுள்ளது. அதில் 2335 கிரகங்கள் வெளிக்கோள்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய 30 கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளதா? இல்லை நம்மை போன்று வேறு கிரகத்தில் உயிரினம் இருக்குறாதா? என்பதுதான் கேள்வி. இந்த கேள்விக்கு அன்று முதல் இன்று வரை முடிவுரை எழுதப்படாமல் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
ஏலியன்ஸ் குறித்து நாசா தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் உயிர்கள் வாழ்வதற்கான தகுதியுடைய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்ற கூற்று மிகவும் வலுவடைந்து வருகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire