மேட்டூர் அணையில் செப்.1-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு ஏற்பாடு
30 ஆவணி 2026 ஞாயிறு 09:46 | பார்வைகள் : 156
### 13 டெல்டா மாவட்டங்களின் விவசாயம்
தமிழ்நாட்டின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் விவசாயம் மேட்டூர் அணை நீரையே பெரிதும் நம்பியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
எனினும், அந்த தேதியில் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாக மட்டுமே இருந்ததால், வழக்கமான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
### குறுவை சாகுபடி பரப்பு குறைந்தது
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி நீரை நம்பியிருந்த டெல்டா விவசாயிகளால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியவில்லை. நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கராக இருந்த குறுவை சாகுபடி பரப்பு, இந்த ஆண்டு 3.78 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. இதையடுத்து, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்து வந்தனர்.
### செப்டம்பர் 1-ந் தேதி திறப்பு
இந்த நிலையில், சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக சென்று அணையை திறந்து வைக்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி 89.72 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. அதாவது, 52.33 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதால், இந்த நீர் 45 நாட்களுக்கு போதுமானதாக இருக்காது என டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
### தண்ணீர் தேவை என்ன?
பாசனப் பகுதியின் கடைமடை வரை காவிரி நீர் சென்றடைய வேண்டுமெனில், தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு இதற்கு போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தென்மேற்கு பருவமழையும் போதிய அளவில் பெய்யவில்லை. அடுத்ததாக, அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை போதுமான மழையை வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
### விவசாயிகள் சொல்வது என்ன?
டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்காக செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.
இவ்வளவு தண்ணீர் தேவைப்படும் நிலையில், மேட்டூர் அணையில் தற்போது 89.72 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை செப்டம்பர் 1-ந் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 15-ந் தேதிக்கு மாற்றினால், அணையில் தண்ணீர் குறையும் நேரத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனினும், இதுதொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire