Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் உயரும் வெப்பநிலை - வெப்ப அலையாக மாறும் அபாயம்!!

மீண்டும் உயரும் வெப்பநிலை - வெப்ப அலையாக மாறும் அபாயம்!!

30 ஆவணி 2026 ஞாயிறு 15:19 | பார்வைகள் : 275


இதுவரை பதிவான மிக அதிக வெப்பமான கோடைகாலத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அடுத்த சில நாட்களில் வெப்பநிலை மீண்டும் கணிசமாக அதிகரிக்கவுள்ளதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதியில் நாட்டின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 30°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நாட்டின் தென்பகுதியில் உள்ள Lyon, Bordeaux மற்றும் Avignon போன்ற நகரங்களில் வெப்பநிலை 35°C-ஐ நெருங்கலாம் அல்லது அதனைத் தாண்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டிருந்த இந்தப் பகுதிகளில் மீண்டும் அதிக வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் கடுமையான வெப்பநிலை ஏற்படுவது புதிதல்ல. 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 முதல் 11ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகி, பல இடங்களில் மாதாந்திர வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டன. Paris உள்ளிட்ட Île-de-France பகுதிகளும் அப்போது வெப்ப அலைக்கான செம்மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. எனினும், தற்போதைய வெப்பநிலை உயர்வு முழுமையான “canicule” எனப்படும் கடுமையான வெப்ப அலையாக மாறுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்