Paristamil Navigation Paristamil advert login

Grand Canyon பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! பலர் மாயம்

Grand Canyon பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! பலர் மாயம்

31 ஆவணி 2026 திங்கள் 10:36 | பார்வைகள் : 124


அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் (Grand Canyon) தேசியப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் நடைபாலங்கள், பாறைகள் மற்றும் உலோகக் கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கொலராடோ ஆற்றில் இடிபாடுகள் கலந்துள்ளதால் அப்பகுதியில் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.  

 

எழுத்துரு விளம்பரங்கள்