போதும் இந்த பொல்லாத வாழ்க்கை...!!
3 ஆவணி 2019 சனி 15:31 | பார்வைகள் : 15239
முகமூடிகளை அணிந்துகொண்டு
முன்னுக்குப்பின்
முரணாகப் பேசும் மூடர்கள்...!
நம்பிக்கைகளுக்கும்
நம்பிக்கை துரோகத்திற்க்கும் இடையில்
நடைபிணமாகும் உயிர்...!
விழிகளில் நீரை வழியவிட்டு
விவாதம் செய்யும்
வீணாய்போன மனிதர்கள்...!
மனதோடு இருந்துவிட்டு - அந்த
மனதையே உடைத்து விடும்
மனித கூட்டம்...!
கனவுகளை புதைக்க சொல்லி
கல்லறைகளை உயிர்ப்பிக்கும்
சந்தர்ப்பவாதிகள்...!
ஏய் கடவுளே...
போதும் எனக்கு இந்த
வெறுத்துப் போகும்
பொல்லாத வாழ்க்கை...!
என் மூச்சை நிறுத்தி
என் இதயத்தை இறக்கவிடு
இப்போதே...
கடவுளே...!
கடைசியாய் ஒரு வேண்டுகோள்...!!
இன்னொரு ஜென்மம்
இனியும் எனக்கு தந்தால்
தயவுசெய்து நீ
மறுபடியும் என்னை
மனிதனாக மட்டும் படைத்துவிடாதே...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire