இரை தேடும் பறவை....!!
17 ஆனி 2018 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 15560
இறைவன் அளித்ததோ
இரு இறக்கைகள்
பறக்கத் தெரிந்தபின்
சிறகடித்து
பறப்பதோ பல காததூரம் !
கூட்டிலே .....
முடங்கிக் கிடக்கவில்லை
குஞ்சுக்கு பசியாற்ற
கொஞ்சமும் சலிக்காமல்
பறக்கிறது பறவை
இரை தேடும் பறவை !
சோம்பேறிகளே...
கடவுள் அளித்த
கை கால்கள் நன்கு
இயங்கிய பின்னும்
ஓடி உழைக்காமல்
இச்சையுடன்
பிச்சையெடுக்கிறாயே !
சோம்பேறிக் கூட்டங்களே....
கரை தேடும் அலைகள்போல்
இரை தேடும் பறவைகளை
விண்ணிலே ஊன்றி கவனி
உழைத்து வாழ நினை
உயரும் உன் நிலை !
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire