45,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு!
30 தை 2021 சனி 07:10 | பார்வைகள் : 15845
சுமார் 45,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பழைமையான குகை ஓவியத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள குகையில் ஒரு காட்டுப் பன்றியின் ஓவியம் 45,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொல்லியல் ஆய்வின் கண்டுபிடிப்புகள் Science Advances பத்திரிகையில் வெளியாகியுள்ளது. தெற்கு சுலவெஸி பகுதியில் இந்த குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் ஒரு வகை காட்டுப் பன்றியை வரைந்துள்ளனர்.
இந்தோனேசிய பகுதியில் 45,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக இந்த ஓவியங்கள் பார்க்கப்படுகின்றன. இதுகுறித்து பேராசிரியர் ஆடம் புரும், “லீங் டெடோங்கே சுண்ணாம்புக் குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பன்றி ஓவியம்தான் இதுவரை உலகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான கலைப் படைப்பு.
சுண்ணாம்புக் குன்றுகளால் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இந்த குகை இருக்கிறது. மழைக் காலத்தில் வெள்ளநீர் சூழ்ந்துகொள்வதால் வெயில் காலத்தில் மட்டுமே இங்கு வர முடியும். இப்பகுதிக்கு மேற்கத்தியர்கள் இதுவரை வந்ததே இல்லை என இங்கு வாழும் புகி சமூக மக்கள் கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire