Paristamil Navigation Paristamil advert login

Instagramஇற்கும் வந்த புதிய சோதனை!

Instagramஇற்கும் வந்த புதிய சோதனை!

25 கார்த்திகை 2018 ஞாயிறு 06:48 | பார்வைகள் : 14270


உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பவற்றில் பல போலிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இதனால் ஏனைய பயனர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க இரு நிறுவனங்களும் போலிக் கணக்குகளை நீக்கி வருகின்றன.
 
இதேபோன்று இன்ஸ்டாகிராமிலும் ஒரு பிரச்சினை விஸ்வரூபமெடுத்து வருகின்றது.
 
அதாவது போலியான லைக் மற்றும் கொமண்ட் என்பன இடப்பட்டு வருகின்றது.
 
இதற்காக மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
எனவே இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றினை எடுக்கவுள்ளது.
 
இதன்படி மூன்றாம் நபர் மென்பொருட்களை இனங்காணக்கூடிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
 
குறித்த டூலானது போலியான லைக் மற்றும் கொமண்ட்களை தானாகவே நீக்கிவிடும்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3